K U M U D A M   N E W S

எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்- அமைச்சர் கோவி.செழியன்

எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

பட்டா நிலத்தில் பாதை கேட்டு மிரட்டல்.. அமைச்சர் உதவியாளர் மீது விவசாயி புகார்

விருதுநகர் அருகே பட்டா நிலத்தில் பொதுமக்கள் செல்ல பாதை விடக்கோரி நிதியமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் எதிரொலி: சென்னை விமானங்கள் ரத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கால் டாக்ஸி விபத்து: தந்தை, கர்ப்பிணி உயிரிழப்பு-மதுபோதையால் நடந்த சோகம்

சென்னையில் கால் டாக்ஸி விபத்தில் தந்தை மற்றும் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை

கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

‘செருப்பு தைக்கும் தொழிலை செய்’.. சாதிய கொடுமைக்கு ஆளான பயிற்சி விமானி

இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

'சைலோரே'.. ‘காதி’ படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியீடு..!

அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘காதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது.

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

சொத்து குவிப்பு வழக்கு: திமுக MP ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.