K U M U D A M   N E W S

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டெல்லியில் சோகம்: ரீல்ஸ் சண்டையால் மனைவி கொலை; கணவர் தற்கொலை!

டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 தேசிய விருதுகள் வென்ற பார்க்கிங் படக்குழு – நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!

71வது தேசிய திரைப்பட விருதுகளில், 3 தேசிய விருதுகளை வென்றுள்ள பார்கிங் திரைப்படக் குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற பிரபலங்களின் பட்டியல்!

இந்திய அளவில் சிறந்த திரைப்பட கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தேசிய விருதினை பெறும் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்... குவியும் வாழ்த்து!

National Awards 2025: டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், தமிழ் திரைப்படங்கள் விருதுகளை குவித்துள்ளன. இதில் தமிழ் திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெகதீப் தன்கரின் ராஜினாமா அரசியல் பின்னணி கொண்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம்.. காங்கிரஸ் ஆதரவு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்கள் கட்சி எம்.பி.க்கள் தீர்மானத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி ?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.