K U M U D A M   N E W S

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்

கமல்ஹாசனுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார்!

சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

'அஜித் சாருடன் அடுத்த படம்'.. உறுதி செய்த ‘குட் பேட் அக்லி’ இயக்குநர்

அஜித்தின் 64-வது படத்தை இயக்க இருப்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்திருக்கிறார்.

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

AK-64: அஜித் மேலாளர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

திருக்குறள் சனாதனத்திற்கு நேரெதிரானது.. ஆளுநருக்கு திருமாவளவன் பதிலடி

புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.

டபுள் ஹீரோ கதையில் இணையும் ரவி மோகன்- எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம்- மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம் வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

உதைகையில் கோடை சீசன் நிறைவு.. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு!

ஞாயிறு விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையில் பூங்காவை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

SSPL -சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் அறிமுக விழா.. வெற்றிப்பரிசு 3 கோடியை வெல்லப்போவது யார்?

தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. 14 பயிர்களுக்கான MSP விலை உயர்வு

மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரவி- ஆர்த்தி விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

ரவி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாரா? உண்மையினை உடைத்த ஆர்த்தி

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

127-வது உதகை மலர் கண்காட்சி.. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதலமைச்சர்!

உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.