K U M U D A M   N E W S

மாநாடு

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி – 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.

நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கனிமொழி எம்.பி.,

பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்

கூட்டணி வேறு.. கொள்கை வேறு - முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி

தி.மு.க கையாளாகாத வேலையை காட்ட RSS நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளதாகவு, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்.. அதிமுகவினர் உடலில் ஓடுவது ரத்தமா? பாஜக பாசமா? - ஆர்.எஸ்.பாரதி சாடல்

அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா புகைப்படங்கள் குறித்த சர்ச்சை.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு.. ஜி.கே. வாசன் பேட்டி

"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.