K U M U D A M   N E W S

பெண் அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்திய தமிழக அரசு.. நீதிபதிகள் அதிருப்தி

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்கள் பணி.. தேர்வு பட்டியல் ரத்து.. நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு.. முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவாஸ்கனி எம்.பி வழக்கு – நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2014ம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்