K U M U D A M   N E W S

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை(ஜூன்4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடுவோம்-திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது - கீ. வீரமணி

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி 1.65 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்தவர் கைது!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யா பயணம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.