K U M U D A M   N E W S

தெப்ப மிதவையில் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை..!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் மின்னொளியில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை உடன் அருள்பாலித்தனர்.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு.. நாளை எதிர்ப்பு..!

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கின்றது.

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை... அமைச்சர் பேரவையில் விளக்கம்

HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை, இந்த வைரஸ் வீரிய தன்மை கொண்ட வைரஸ் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. அனைவரும் வெட்கப்பட வேண்டும்.. நீதிபதி வேதனை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வழக்கு - டெல்லியை சேர்ந்தவர் கைது

விகாஷ் மைதி என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.

அண்ணா பல்கலை விவகாரம் - பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

பாமகவில் இருந்து முகுந்தன் விலகல்?

பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.