K U M U D A M   N E W S

மக்கள்

ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளை.. வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடரும் அறிவிக்கபடாத மின்வெட்டு.. நள்ளிரவு வேளையில் பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்!

காஞ்சிபுரம் பகுதிகளில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதான சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில் சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்கு சாதகமாக காவல்துறையினர் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

உலகளவில் அதிகரித்த இஸ்லாமியர்கள்..! குறைந்த கிறிஸ்துவர்கள்..! இந்துக்கள் எவ்வளவு தெரியுமா? வெளியான சர்வே ரிப்போர்ட்..!

உலக மக்கள் தொகையில் அதிகளவில் இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையானது பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து பாஜக சதி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.