K U M U D A M   N E W S

போக்குவரத்து

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு: 16,500 போலீசார் பாதுகாப்பு!

சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் த.வெ.க. மாநாடு: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள்குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

நாளை வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளா நீங்கள்...போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு 4 வாரங்கள் தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

சென்னையில் விதிமீறும் வாகன ஓட்டிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இரண்டு மாத காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.