K U M U D A M   N E W S

கணக்கில் வராத ரூ.2.64 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.64 லட்சம் ரொக்கம் பறிமுதல். லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

#breaking | அமலாக்கத்துறை சோதனை - 4 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் - பள்ளிப்பட்டு அருகே அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக 4 இளைஞர்களைஅமலாக்கத்துறை கைது செய்தது. பணப்பரிவர்த்தனை தொடர்பாக 4 இளைஞர்களிடமும் 19 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்

“குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

குரங்கம்மை.. ICU-வை தயார் நிலையில் வையுங்கள்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை

மருத்துவமனைகளில் ICU-வை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என குரங்கமை எதிரொலியால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

'இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை'.. கிராமங்களில் அறிவிப்பு பலகையால் சர்ச்சை!

''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகா விஷ்ணு விவகாரம்: கல்வித்துறை செயலாளரிடம் இன்று அறிக்கை தாக்கல்.. அடுத்தது என்ன?

மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் குரங்கம்மை? வெளிநாட்டில் இருந்து வந்த அந்த நபர்...மத்திய சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு. குரங்கம்மை தானா என உறுதி செய்ய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

BREAKING | தவெக மாநாடு நடத்த - 33 நிபந்தனை.. - என்ன காரணம்..? உடைந்த ரகசியம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் காவல்துறை அனுமதியளித்துள்ளனர்.