த.வெ.க வழக்கு.. ஜூன் மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம்!
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரத்தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.
டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மனதில் நேர்மையும் கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது என விஜய் பேச்சு
தவெகவின் கொள்கைத்தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று கோவையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களுக்கு Y- பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை சென்றார்