K U M U D A M   N E W S

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தாக ரீல்ஸ்... வருத்தம் தெரிவித்த இளைஞர்கள்

அபராதம் கட்ட சென்று, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தா ரீல்ஸ் வெளிட்ட இளைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HBD vikram: தடைகளை தகர்த்தெறிந்த வயோதிக வாலிபன்.. நடிப்பு அரக்கன் ’சியான்’ விக்ரம் பிறந்த நாள்

நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

“செர்பியாவில் சரியாக உணவு கிடைக்கவில்லை”- போட்டியில் பதங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்

ரஜினி-கமல் இதனால் தான் உயரத்தில் இருக்கிறார்கள்.. உண்மையை உடைத்த சுந்தர்.சி

ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு... ஆண் குழந்தைக்கு தந்தையான கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் - நடிகை சாகரிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஃபடேஸின் கான் என பெயரிட்டுள்ளனர்

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கு.. திரும்ப பெற்ற எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவின் கருப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டி.டி.வி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுக் கொண்டார். வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா.. ஆண்கள் மட்டும் செலுத்தும் நேர்த்திகடன்

மூன்று நாட்கள் செல்லியாண்டி அம்மன் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

சீமானுக்கு எதிரான வழக்கு..வீடியோ ஆதாரங்களை பார்த்த பிறகு உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரபட்ட வழக்கில், சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.