K U M U D A M   N E W S

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகா திருமணம் நிச்சயதார்த்தம்.. பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மெடிக்கல் ஷாப்பில் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு.. மேலும் ஒருவர் கைது!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் ( Medical Shop) கத்தியைக் காட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்.. 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா புகார்!

சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பரிச்சயமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவைக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மின்னஞ்சல்மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.