K U M U D A M   N E W S

சென்னை

மீண்டும் உருவாகும் 'ஆபத்து' - இதுவரை இல்லாத அளவுக்கு "வார்னிங்"

தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து கிடையாது.. ஆரியத்தை தூக்கியது யார்? - கொந்தளித்த சீமான்

நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என்றும் வரலாற்றில் ‘ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று தான் உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

#JUSTIN: Car Accident in Kilpauk அதிவேகத்தில் வந்த கார்.. 6 பேர் காயம்.. தர்ம அடி கொடுத்த மக்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை... ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும்...? - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி

சென்னை தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த சிறிய தவறுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உணவின் தரம் குறித்து புகார்... தனிமை சிறையில் அடைக்கப்பட்ட கைதி..? நீதிமன்றம் அதிரடி உததர்வு

புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல - நீதிபதி ஆவேசம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு அவலமா..? - மக்கள் கடும் வேதனை

சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

வன்மத்தை கக்குகிறார் ஸ்டாலின்... திமுகவினர் திராணியற்றவர்கள்... எல்.முருகன் கடும் சாடல்!

பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.