K U M U D A M   N E W S

மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை!

கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு, வேறு பாதையில் ஆட்டோ ஓட்டுநருக்கும், பெண் நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மாறி மாறித் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

சொகுசு பயணக் கப்பலில் பயங்கர தீவிபத்து – உயிர்பிழைக்க கடலில் குதித்த பயணிகள்!

இந்தோனேசியா தலாவுத் தீவிலிருந்து மனாடோ நகரை நோக்கி 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் உயிர் பிழைக்கக் கடலில் குதித்த பயணிகளை மீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சொகுசு கார்களைத் திருடிய எம்பிஏ பட்டதாரி.. சவால்விட்ட திருடனை கைது செய்த சென்னை போலீஸ்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Rolls Royce சொகுசுகாரை திருடுவது போல, நாடு முழுவதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான சாவி தயாரித்து சொகுசு காரர்களை திருடிய மெகா திருடனை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

'அஜித் சாருடன் அடுத்த படம்'.. உறுதி செய்த ‘குட் பேட் அக்லி’ இயக்குநர்

அஜித்தின் 64-வது படத்தை இயக்க இருப்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்திருக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் - நயினார் நாகேந்திரன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாவன் மாதம்: காசியாபாத் KFC-வில் அசைவத்திற்கு தடை!

இந்துக்களின் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது எனக் காசியாபாத் KFC உணவகத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிளையில் தற்போது சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. ரயில் மீது குதித்த அதிர்ச்சி சம்பவம்

ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது- சீமான் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.