K U M U D A M   N E W S

சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம்: கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக்த்திற்கான கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பெரும் சோகம்! கீழே கிடந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு: 16,500 போலீசார் பாதுகாப்பு!

சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை - சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கக் கடத்தல் விவகாரம்: சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை!

தங்கக் கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், சென்னை அண்ணாநகர், பூக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - அதிமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - சசிகலா உருக்கமான கடிதம்!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கோரிக்கையும், கட்சி பிளவுபட்டால் திமுக குளிர் காயும் என தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் ட்ரீம் 11 ஒப்பந்தம் ரத்து! புதிய ஸ்பான்சரை தேடும் பிசிசிஐ!

ட்ரீம் 11 நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம், புதிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் முடிவுக்கு வந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.