K U M U D A M   N E W S

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

12 மாவட்டங்களில் டேஞ்சர்..! - ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கொட்டிய மழை.. தேங்கிய மழைநீர்.. துரித நடவடிக்கை எடுத்த மாநகராட்சி

சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 பகுதிகளில் அகற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 103 இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மக்களே... எச்சரிக்கை.. தொடரும் ரெட் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அறுந்து விழுந்த மின்கம்பி.. மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு ராஜ வீதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 24 வயது நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

3 வேளையும் இலவச உணவு.. வெளியானது சென்னையில் உணவுக் கூடங்களின் பட்டியல்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

3 வேளையும் உணவு... சென்னை மாநகராட்சியின் ஏற்பாடு...

சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.