K U M U D A M   N E W S

சிவகங்கை

கோடிகளில் கார் பந்தயம்.. கட்டுப்பாட்டு அறையில் ஆள் இல்லை.. சீமான் கொந்தளிப்பு

பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கையை அதிரவிட்ட சம்பவம்; ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்| Kumudam News 24x7

சிவகங்கை அருகே மதகுப்பட்டியில் ஒருதலைக் காதலால் பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை.. அவதிக்குள்ளான மக்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் மூழ்கியதால் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வீடுகள் இடித்து அகற்றம் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிவகங்கையில் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் போராட்டத்தில் குதித்த மக்கள்.

விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம்.. நிவாரணம் கோரி சாலை மறியல்

விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்.

விஷவாயு தாக்கி இருவர் பலி.. சிவகங்கை அருகே நடந்த சோகம்

சிவகங்கை இளையான்குடியில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர். அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

மானாமதுரை இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் சாலை மறியல் !

Sivagangai Murder: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 20 வயது இளைஞர் படுகொலை.. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல்..

மருத்துவ கனவை நனவாக்கிய ஏழை மாணவர்கள்..கொண்டாடித் தீர்க்கும் ஊர் மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தப்பியோட முயன்ற இளைஞர்.. போலீஸார் துப்பாக்கி சூடு.. பாஜக நிர்வாகி கொலையில் அதிரடி

BJP Selvakumar Murder in Sivagangai : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க சென்ற வசந்தகுமார், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.