K U M U D A M   N E W S

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டெல்லியில் சோகம்: ரீல்ஸ் சண்டையால் மனைவி கொலை; கணவர் தற்கொலை!

டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு

ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரீல்ஸ் மோகம்: இளைஞரை கொன்று ஐபோன் திருடிய 2 சிறுவர்கள்..!

இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கணவன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது.. மனைவி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு என்பவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ்.. கணவன் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டா பழக்கம்.. ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் நகைகளை வழங்கிய பள்ளி மாணவி

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம்...2 மாதத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு

ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுத்து காவல்துறையினர் விசாரணை