K U M U D A M   N E W S

அண்ணா பல்கலை விவகாரம் - பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

திமுக அரசை எதிர்த்து யாரும் பேச கூடாதா..? முதல்வர் பதில் கூற வேண்டும்.. சசிகலா

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கும் என பலரும் கூறுகிறார்கள். இதற்கான பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டாயமாக கூற வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில்  அதிமுகவினர் போராட்டம் நடத்த முயற்சி.

அடைக்கப்பட்ட நாதகவினர்.. அடங்க மறுத்து போராட்டம்

சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.

திமுக நடத்தினால் போராட்டம் நாதக நடத்தினால் நாடகமா..? சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மதுரை to சென்னை நீதிப்பேரணி.. அண்ணாமலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக மகளிரணி நீதிப்பேரணி - அண்ணாமலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி அண்ணாமலை.

அருவருப்பு அரசியல் செய்கிறார்.. சேடிஸ்ட் மனநிலையை பழனிசாமி நிறுத்த வேண்டும்- ரகுபதி அறிக்கை

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

மாணவி வன்கொடுமை விவகாரம்.. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நிலையில் சீமான் கைது..!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டார்.