K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

மதுவிலக்கு மாநாடு: திமுகவை எதிர்க்கிறாரா திருமாவளவன்?.. அமைச்சர் முத்துசாமி பதில்!

திருமாவளவன் தனது கருத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வாய் பேச்சால் வந்த வினை.. மகாவிஷ்ணுவுக்கு இன்று மிக முக்கிய நாள்!

மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வராது.. எல்.முருகன் பாய்ச்சல்!

தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

குமுதம்-கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி

குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி கோவையில் நடந்தது.

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்

நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

ஊரகப் பகுதிகளில் உள்ள 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

பாலியில் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டிகள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

#Breaking: கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்.. அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கள்ளிப்பால் குடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மாணவர்கள் விளையாட்டுத் தனமாக கள்ளிப்பாலை குடித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது மாணவி தாக்குதல்... போராட்டத்தில் குதித்த ஓட்டுநர், நடத்துநர்கள்

சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. போராட்டத்தில் குவித்த வியாபாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கடைகள் அகற்றப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் வெடித்த வன்முறை... மணிப்பூரில் இணைய சேவை நிறுத்தம்

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தில் ஒரே வாரத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவைகளை முடக்கி அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது 

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

ஆதார் சேவை மையத்தில் குவிந்த மக்கள்

மதுரை கே.கே.நகரில் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை நெடுகிலும் குழந்தைகளுடன் ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்

விவாகரத்துகோரி ஜெயம் ரவி மனு தாக்கல்

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது

மத்திய அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் புத்தக திருவிழாவிற்கு வந்த மாணவர்கள் வெயிலில் தவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

த.வெ.க. மாநாடு தள்ளிப்போகிறதா..?

விழுப்புரம் மாவட்டம் விக்கிராண்டியில் செப்.23ம் தேதி த.வெ.க. மாநாடு நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி த.வெ.க.வின் முதல் மாநாடு நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது 

அதிமுகவிற்கு அழைப்பு - கூட்டணிக்கு அடித்தளமா? வைகைச்செல்வன் கருத்து

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்புவிடுத்ததை பற்றி வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்

திருமா எடுத்த முடிவு.. இறங்கி அடிக்கபோகும் விசிக"கூட்டணி..?" - பிரஸ் மீட்டில் பகீர்

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

"பல முறை சொல்லிட்டோம் - இந்த முறை இறங்கிட்டோம்.."உச்சி வெயிலில் கத்திய கூட்டம்

திருவாரூர் பைங்காட்டூர் கிராமத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம். சுமார் 35,000 ஏக்கர் விளை நிலங்களின் பயிர்கள் கருகி வருவதாக தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்