3-4 மணி நேரத்தில் ஃபெஞ்சல் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
ஃபெஞ்சல் கரையை அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
ஃபெஞ்சல் கரையை அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மெரினா அருகே மழைநீரில் மின்கசிவு என்று பரவிவருவது வியட்நாம் காணொளி
4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.
இங்கிலாந்தில் அரசியல் கல்வி முடித்து, இன்று சென்னை திரும்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை
திருவள்ளூர் யமுனா நகரில் வெள்ள நீர் வடியாததால் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அவதி
செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலைய அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் எடுத்துகொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.
புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பிராட்வேயில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்