K U M U D A M   N E W S

கார் சேசிங் சம்பவம் - 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சினிமாவை மிஞ்சிய கார் சேசிங் சம்பவத்தில் 5 பேர் கைது.

72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து- உள்ளே இருந்த பயணிகளின் நிலை?

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்து.

மாணவியை மிரட்டி நடந்த கோரம் - சிக்கிய முக்கிய நபர்.. வெளிவருமா உண்மை..?

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.

மாணவி வன்கொடுமை..வெடித்த போராட்டம்

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக் கழக வாயிலில் போராட்டம்.

மாணவி வன்கொடுமை.. 3 பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.

விடுதலை-2 படத்தை பார்த்து தான் தமிழ்நாட்டில் வன்முறை நடக்குதா? - சீமான் கேள்வி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேரை சுட்டுக் கொன்றது அதிகாரமா? இல்லையா? சீமான் கேள்வி

குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை.. இளைஞரை கொலை செய்த நண்பர்கள்

குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை செய்த நபரை நண்பர்கள் இருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை விவகாரம்.. விளக்கம் அளித்துள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம்..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது.

வெடித்து சிதறிய விமானம்.. 72 பயணிகளின் நிலை என்ன..?

கஜகஸ்தான் அக்டாவ் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சூர்யா 44' படத்தின் தலைப்பு இதுதான்.. இணையத்தில் வைரலாகும் டீசர்

‘சூர்யா-44’ படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் கிறிஸ்துமஸ் விழா.. சுனிதா எப்போது வருவார்..? நெட்டிசன்கள் கேள்வி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. 

200 தொகுதிகள் இலக்கு.. காங்கிரஸை கழற்றிவிடுகிறதா திமுக? தலைமையின் பலே திட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இபிஎஸ் vs ஓபிஎஸ்.. கிறிஸ்துமஸ் விழாவில் நீயா-நானா? ஒரே சிரிப்பு தான் போங்க!!!

சென்னை கீழ்பாக்கத்தில் கிறுஸ்துமஸ் விழாவில் இபிஎஸ் கலந்துக்கொண்ட அதே நாளில், தானும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப்போகிறேன் என்று கூறி முதியோர் காப்பகத்தில் பரோட்டா சால்னா வழங்கி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி முடித்துள்ளார் ஓ.பி.எஸ். இருவரும் நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அதிவேக பயணம்.. பரிதாபமாக பறிப்போன இளைஞர் உயிர்

சென்னை  சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

178 ஆண்டு பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை; விஜய் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தட்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

கிறிஸ்துமஸ் விழா: சாந்தோம் தேவாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு அழைத்தபோது காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பொய்யான கருத்துக்களை தெரிவித்த விவகாரம் தொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாம்பியன் டிராபி தொடர் அட்டவணை வெளியீடு... இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எங்கு..? எப்போது..?

ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. மதுரை காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தை மதுரை காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு. 

டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு