K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

Erode ByElection 2025: "58" வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள்  65  வேட்புமனுத்தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு எதிராக கடிதம் எழுதிய எச்.ராஜா..? பாஜக ஐடிவிங் சார்பில் மனு

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

என் மகனை குத்திவிட்டு உடலை கொடுத்திருக்கலாம்.. ரவுடி பன்னீர் செல்வத்தின் தாய் கதறல்

2018-ல் காணாமல் காணாமல் போன ரவுடி பன்னீர் செல்வத்தை எரித்து கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்த நிலையில் என் மகனை குத்திவிட்டு உடலை என்னிடம் கொடுத்து  இருக்கலாம் என்று பன்னீர் செல்வத்தின் தாய் கதறி துடித்தார். 

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம்.. நீதிமன்றம் தீர்வு காணும் என எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா

ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் - அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு..!

செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி  கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிப்பறி வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு