ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவுபடிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெளிவுப்படுத்திய நீதிபதி காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தினார்.
ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாகவும், போதிய கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கைதி தற்கொலை செய்து கொண்ட போது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.
எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.