K U M U D A M   N E W S

இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மத்திய சுகாதாரத்துறை

தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கருணாநிதி நினைவு நாணயத்தை இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 18) அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடுகிறார்.

யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் புகார்.. என்ன விஷயம்?

''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

“இளம் பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது” - வாஷிங்டன் சுந்தர்

கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

GOAT Trailer: 'கோட்' டிரெய்லர்.. ஆக்சனில் தெறிக்க விடும் விஜய்.. பாராட்டிய அஜித்!

''கோட் பட டிரெய்லர் பார்த்து நடிகர் அஜித்குமார் பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னார்'' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற டிஜிபிக்கு முதல்முறையாக முக்கிய பதவி.. யார் இந்த சுனில் குமார்?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

18,000 பெண் ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி ரூ.706.50 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விடுதியில் 18,720 பெண்கள் தங்கிக் கொள்ளலாம்.

“காலமும், என்னுடைய விதியும் சரியாக அமையவில்லை” - வினேஷ் போகத் உருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், காலமும் என்னுடைய விதியும் சரியாக அமையவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அரசின் சொகுசு கார் இருந்தும் சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் நெல்லை மேயர்.. அசந்து போகும் மக்கள்!

மேயராக பதவியேற்ற பிறகும் ராமகிருஷ்ணன் சைக்கிளை கைவிடவில்லை. தனது வார்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் செல்லும் அவர், தினம்தோறும் குப்பைகள் அள்ளப்படுகிறதா? குடிநீர் ஒழுங்காக வருகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்களிடம் கேட்டறிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.