K U M U D A M   N E W S

பிரபல ரவுடி சிடி மணி கைது

சேலத்தில் தலைமறைவாக இருந்த பிபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன

ஃபாஸ்ட் ஃபுட் கடை முதலாளி காரில் கடத்தல்.. போலீஸ் தேடியதும் பஸ்ஸில் அனுப்பி வைத்த மர்ம கும்பல்

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை.. புதூர் அப்புவிற்கு டெல்லியில் ஸ்கெட்ச் போட்ட போலீஸார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்த, புதூர் அப்புவை டெல்லியில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

ஏடிஎம்-ஐ உடைத்து சுமார் ரூ.1 கோடி அபேஸ்

ஆந்திரா: விஸ்வேசரய்யா சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது எச்சரிக்கை ஒலி அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம். இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது கொள்ளை போனது தெரியவந்துள்ளது

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

காதல் திருமணம் செய்ய மூதாட்டியிடம் நகை பறிப்பு.. தனிப்படை அமைத்துப் பிடித்த போலீஸார்

காதல் திருமணம் செய்ய மூதாட்டியின் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற புதுமாப்பிள்ளையை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Live : ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

’நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை.. ஆனால்..’..குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியா அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயை குணமாக்க இந்தியா தடுப்பூசி தயாரித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பப்பை புற்றுநோயை குணமாக்க புதிய சிகிச்சை நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளோம்.

BREAKING | இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக 53.84% வாக்குகளை பெற்று முன்னிலை