K U M U D A M   N E W S

பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டிகள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

‘யாரு பவுன்சர் போட சொன்னது?’ - தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த சி.எஸ்.கே. வீரர்

இலங்கை வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்தை, தோனி சிக்ஸர் அடித்ததையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? - முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

“கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#Breaking: கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்.. அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கள்ளிப்பால் குடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மாணவர்கள் விளையாட்டுத் தனமாக கள்ளிப்பாலை குடித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது மாணவி தாக்குதல்... போராட்டத்தில் குதித்த ஓட்டுநர், நடத்துநர்கள்

சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இடி, மின்னலுடன் மிதமான மழை.... தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் நீண்ட கால சாதனை முறியடிப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அபாரம்

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை சேசிங் செய்த, ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. போராட்டத்தில் குவித்த வியாபாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கடைகள் அகற்றப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இனி வெளிநாடுகளுக்கு பறக்க உள்ளது ஆவின்” - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை!

ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வெடித்த வன்முறை... மணிப்பூரில் இணைய சேவை நிறுத்தம்

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தில் ஒரே வாரத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவைகளை முடக்கி அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது 

“குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! - தலைவர்கள் இரங்கல்!

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

“வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனின் மறைவு சமூகத்திற்குப் பேரிழப்பு!” - அண்ணாமலை இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆதார் சேவை மையத்தில் குவிந்த மக்கள்

மதுரை கே.கே.நகரில் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை நெடுகிலும் குழந்தைகளுடன் ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்

விவாகரத்துகோரி ஜெயம் ரவி மனு தாக்கல்

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது

மத்திய அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Vellaiyan : வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்.. 2 நாட்கள் கடையடைப்பு

T Vellaiyan Passed Away in Chennai : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்றுக் காரணமாக காலமானார். 2 நாட்கள் கடைகளை அடைத்து துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!

"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் புத்தக திருவிழாவிற்கு வந்த மாணவர்கள் வெயிலில் தவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

த.வெ.க. மாநாடு தள்ளிப்போகிறதா..?

விழுப்புரம் மாவட்டம் விக்கிராண்டியில் செப்.23ம் தேதி த.வெ.க. மாநாடு நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி த.வெ.க.வின் முதல் மாநாடு நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது