Ameer: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு... ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் ஆஜராக உத்தரவு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் 559 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்காக சென்ற அக்கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். ஆனால், அவர்களுக்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பலியானவர்களின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி திமுகவிடம், ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது, இதைதான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தொகுதி பார்வையார்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
கூட்டணி வலுவாக உள்ளதாக திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நீலகிரியில் இருந்து கார் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26-10-2024 | Mavatta Seithigal
01 PM Speed News | விரைவுச் செய்திகள் | 28-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
கடந்த ஜூன் 7ம் தேதி நடந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தீபாவளிக்கு (அக். 31) மறுநாள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டு பகுதி சரிந்து விழுந்தது. நீண்ட நேரம் போராடியும் சரிசெய்ய முடியாததால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் தெரிவித்திருப்பது விசிகவுக்கான சிக்னல் இல்லை. விசிகவை ஆதரிக்கும் மக்களுக்கு கொடுக்கும் சிக்னல் என அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட், லட்சுமி டூல்ஸ், புல் மிஷின் ஆகிய நிறுவனங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் ரூ.42 கோடி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.