கள்ளச்சாராய விவகாரம்.. சிபிஐக்கு மாற்றம்... தமிழக அரசுக்கு பலத்த அடி.. பாஜக விமர்சனம்!
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கனமழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் மழைநீர் தேங்கியது
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.
மீன்வளத்துறை எச்சரிக்கையால் கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்திக்கொலை.
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்தார்
கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.
வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.
திரைப்படங்கள் மீதும், சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற இரண்டு மசோதாக்களை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அமேசான் இந்தியா தனது நிறுவனத்தின் தலைமையகத்தை பெங்களூருவில் உலக வர்த்தக மையத்திருந்து (WTC) விமான நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.