K U M U D A M   N E W S

குரங்கம்மை.. ICU-வை தயார் நிலையில் வையுங்கள்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை

மருத்துவமனைகளில் ICU-வை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என குரங்கமை எதிரொலியால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

JayamRavi: “என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக..” மனைவியை பிரிய ஜெயம் ரவி சொன்ன காரணம்.. உண்மை இதுதானா?

Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : நடிகர் வரும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சில தினங்களாகவே இதுகுறித்து செய்திகள் வெளியாகிவந்த நிலையில், திடீரென மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

த.வெ.க.வில் இணையும் அதிமுக முக்கியப்புள்ளி?.. இபிஎஸ் கொடுத்த பதில்

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெக கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார் 

இந்திய அணியில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது ஏன்?.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு.. CBI-க்கு அவகாசம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் 

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Jayam Ravi : “திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்..” மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி!

Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

#JUSTIN: அரசு பள்ளியில் மர்ம நபர்கள் அட்டகாசம்.. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

வார விடுமுறை நாட்களில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்

'நாட்டு நாட்டு..' பாடல் பின்னணியில் தெறிக்க விடும் கமலா ஹாரிஸ்.. பட்டைய கிளப்பும் பிரசார வீடியோ!

கமலா ஹாரிஸ் கெத்தாக நடந்து வருவது, பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களை பார்த்து கையசைப்பது, கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

#JUSTIN : வேலூரில் ரயில் சேவை பாதிப்பு.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வேலூர் ரயில்வே கேட் அருகே மின் வயர் அறுந்ததால் திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது. மின் வயர் சரி செய்யும் பணிக்காக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்தாரா அஜித்..? வெங்கட் பிரபுவுக்கு போன சூப்பர் மெசேஜ்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#breaking: மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

திருப்பூரில் பயங்கரம்... மாமனாரை சுட்டுக்கொன்று உயிரை மாய்த்துக் கொண்ட மருமகன்

திருப்பூர் காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மருமகன் ராஜ்குமாரும் தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கை வரும் 23ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் ரூ.780 கோடி குத்தகை பாக்கி வைத்திருப்பதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

'இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை'.. கிராமங்களில் அறிவிப்பு பலகையால் சர்ச்சை!

''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ameer: மகா விஷ்ணு பஞ்சாயத்து... CM சார் நோட் திஸ் பாயிண்ட்... கருத்து சொன்ன இயக்குநர் அமீர்!

சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

”ஒன்று விந்து, இரண்டு கண்ணீர்.. வாழை ஒரு ஆபாச படம்..” மாரி செல்வராஜ்ஜை விமர்சித்த சாரு நிவேதிதா!

Famous Tamil Writer Charu Nivedita Criticized Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.

'இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை.. சீனாவில் அப்படி இல்லை'.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!

''பலர் இந்தியர்களுக்கு திறமை இல்லை என்று கூறுகின்றனர். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் திறமைசாலிகளுக்கு இந்தியா மதிப்பு கொடுப்பதில்லை'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.