LIVE : சித்தராமையா குடும்பத்தினர் மீதும் வழக்கு
முடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மனைவி, மருமகன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் நடவடிக்கை.
முடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மனைவி, மருமகன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் நடவடிக்கை.
செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா தெரிவித்துள்ளார்.
"விஜய்க்கு தவறான ஆலோசனை சொல்றாங்க" | Ravindran Duraisamy Exclusive interview
பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி வாங்க சென்றாரா? அல்லது தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஆசிவாங்க சென்றாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல் அருகே கொள்ளையர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள். ஏ.டி.எம். கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அக்.1-ம் தேதி பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும். விசாரணைக்காக பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டுமென மாணவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவு
நாமக்கல் - குமாரபாளையம் அருகே வந்த கொள்ளை கும்பலை நிறுத்த முயன்றபோது கண்டெய்னர் லாரியில் தப்பியோடிய கும்பல். கொள்ளையர்கள் தப்பியோடிய கண்டெய்னர் லாரியை நாமக்கல் போலீசார் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இப்படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வரும் அஜித், மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இதுதொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது செம மாஸ்ஸான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்
கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.
Reliance Jio New Recharge Plan 2024 in Tamil : வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஜியோ நிறுவனம் தற்போது அடிரடியான ரீசார்ஜ் பிளான்களைக் களமிறக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.
Heavy Rain in Tamil Nadu : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப். 27) செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடமும் அவர் மனம் திறந்து பேசியிருந்த நிலையில், மனைவி ஆர்த்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மதுரையில் 2010-ல் நடந்த என்கவுன்டர் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க சிசிடிவி-க்கு ஸ்பிரே அடித்த கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது.
ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
O Panneerselvam Press Meet in Chennai : "அஇஅதிமுக(AIADMK) ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான்; ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Senthil Balaji : "பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார்? பொய் வழக்கு போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா?" என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Meiyazhagan Movie Public Review in Tamil : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.