மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 15-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 15-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 15-10-2024 | Mavatta Seithigal
வடகிழக்குப் பருவமழை காரணமாக, விஜய்யின் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதால், தவெக-வுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்.
சென்னை ராமாபுரத்தில் வெள்ளநீர் புகுந்த வீட்டுற்குள் சிக்கித் தவித்த 85 வயது மூதாட்டி மீட்பு.
மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதியும், ஜார்கண்ட்டில் நவம்பர் 13, 20ம் தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பாகிஸ்தான் சிறுமிகள்
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை மயிலாப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை குரோம்பேட்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் ரயில் போக்குவரத்து சீரானது.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வழக்கத்தை விட 84 சதவிகித மழைப்பொழிவு அதிகம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
#JUSTIN: வடகிழக்கு பருவமழை; கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News 24x7
Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7
சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சென்ற வாகங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் கனமழை முடியும் வரை இணைய வழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு ராஜ வீதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 24 வயது நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.