அம்மா உணவகங்களில் இலவச உணவு
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.
கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ.120க்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது
சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.