Vande Bharat: நாகர்கோவில் - சென்னை, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள்... கட்டண விவரம் இதோ!

நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் நாளை (ஆக.31) முதல் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.

Aug 30, 2024 - 21:04
Aug 31, 2024 - 10:09
 0
Vande Bharat: நாகர்கோவில் - சென்னை, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள்... கட்டண விவரம் இதோ!
நாளை புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்

சென்னை: நாளை (ஆக.31) முதல் தமிழகத்தில் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ள இந்த வந்தே பாரத் ரயில்கள், நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்படவுள்ளன. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் தொடக்க நாள் சிறப்பு ரயில், எக்மோரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில், இரவு 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. 

இந்த ரயிலின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் தொடங்குகிறது. அதன்படி சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மீண்டும் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரயில் (20628), நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படுகிறது. சென்னை எக்மோருக்கு இரவு 11 மணிக்கு வந்து சேர்கிறது. சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் இயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,760, அதிகபட்சம் ரூ.3.240 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாளை சென்னையில் நடைபெறும் வந்தே பாரத் தொடக்க விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். அதேபோல், மதுரை – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில், மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது. இந்த வந்தே பாரத் ரயில் (20671) செப்டம்பர் 2 முதல் தொடங்குகிறது. அதன்படி, அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடைகிறது. 

மேலும் படிக்க - சென்னை கார் ரேஸ்... யாரெல்லாம் பார்க்கலாம்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு

பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் மட்டும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை – பெங்களூரு இடையேயான வந்த பாரத் ரயில் 7.45 மணி நேரத்தில் பயணிக்கிறது. இதன் பயணத்தூரம் சுமார் 573 கிலோ மீட்டர் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் மதுரை வழியாக செல்கின்றன. ஆனாலும் மதுரையில் இருந்து இயங்கும் முதல் வந்தே பாரத் சேவை இப்போது தான் தொடங்குகிறது. 

மதுரை விழாவில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வி. சோமன்னா, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மேயர் வி. இந்திராணி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தொடக்க நாள் சிறப்பு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள், சமூகநல ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தொடக்க நாள் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow