Vijay: ”விஜய் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்..” அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்... கோட் பிரபலம் அதிரடி!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த பஞ்சாயத்து ஓய்ந்துவிட்ட நிலையில், விஜய் தான் எப்பவுமே சூப்பர் ஸ்டார் என தற்போது சினேகா பேசி மீண்டும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார்.

Aug 19, 2024 - 11:19
 0
Vijay: ”விஜய் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்..” அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்... கோட் பிரபலம் அதிரடி!
விஜய் தான் எப்பவுமே சூப்பர் ஸ்டார் - சினேகா

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட் கொடுத்திருந்தது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோட் படத்தில் விஜய்யுடன் சினேகா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். வசீகரா படத்துக்குப் பின்னர் விஜய் – சினேகா கூட்டணி கோட் மூவியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், “விஜய் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்” என சினேகா பேசியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

கோலிவுட்டில் எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார், அது ரஜினிகாந்த் தான். ஆனால், வாரிசு படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசி புயலை கிளப்பினார் சரத்குமார். அதே நிகழ்ச்சியில் கடைசியாக பேசிய விஜய், சரத்குமாரின் சூப்பர் ஸ்டார் ஸ்டேட்மெண்ட்டுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு விஜய் ஆசைப்படுவதாக ரஜினி ரசிகர்கள் கருத்துக் கூறி வந்தனர். அதுமட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சண்டைப் போட்டு வந்தனர்.     

இதையெல்லாம் சைலண்டாக கவனித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் “கழுகு – காகம்” கதை சொல்லி விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல், இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது எனவும் அசாட்டாக கூறியிருந்தார். அதன் பின்னர் தான் இந்த சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து இன்னும் உக்கிரமானது. சரி இனி சண்டை வேண்டாம், சமாதானமாக போய்விடலாம் என்பதாக லியோ பட சக்சஸ் மீட்டில் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டார் தளபதியார்.

மேலும் படிக்க - சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தேதி

அதில், “ஒரே சூப்பர் ஸ்டார்; அது ரஜினி தான், ஒரே தல; அது நம்ம நண்பா அஜித் தான், ஒரே உலக நாயகன், அது நம்ம கமல்ஹாசன்” என பேசி அனைவரையும் கூல் செய்தார். இப்படி பல மாமங்கமாக தொடர்ந்து வந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் கோட் திரைப்படம் வெளியாகவுள்ளதால், விஜய் பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றன. இதில் சினேகாவும் அவரது பங்கிற்கு ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதாவது, “விஜய் தான் எப்பவுமே சூப்பர் ஸ்டார். என் வீட்டில் உள்ள குழந்தைங்க எல்லோருக்குமே அவரை தான் பிடிச்சிருக்கு. விஜய் எப்படி அவங்களை அட்ராக்ட் பண்ணார்ன்னு தெரியல. கோட் ஷூட்டிங் ஸ்பாட்ல கூட க்யூட்டா எதாவது பண்ணிட்டே இருப்பார். அவரு எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்” என கூறியுள்ளார். சினேகாவின் இந்த ஸ்டேட்மெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாக, மீண்டும் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் ஒன்றுகூடி பங்கம் செய்யத் தொடங்கிவிட்டனர். விஜய் நடித்துள்ள கோட் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தப் படத்துக்கு தரமான ப்ரோமோஷனாக சினேகாவின் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து மாறியுள்ளது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow