K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

சேப்பாக்கம் மைதானத்தில் செல்போன்கள் திருட்டு..74 செல்போன்கள் பறிமுதல்.. தின்பாஹாரியா கும்பல் கைது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை மையமாகக் கொண்டு, வடமாநில தின்பஹாரியா கும்பல் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலின் 11 பேர் கைது செய்யப்பட்டு, 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை!

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததல் விவசாயிகள் கவலை ஆழ்ந்துள்ளனர்.

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PBKS Vs CSK: தோல்வியிலிருந்து மீளுமா CSK.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

IPL 2025: 3-வது வெற்றியை பெறப்போவது யார்? கொல்கத்தா - லக்னோ இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.

அமைச்சர் கே.என். நேரு மற்றும் சகோதரர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..!

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

பாஜக சட்டமன்றக்குழு தலைவர் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

தமிழக பா.ஜ.க புதிய தலைவருக்கான போட்டியில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் நேற்று இரவு திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.