கடந்த சில நாட்களாக வட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும் நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழை பெய்து வந்தது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது.
விலகியது வடகிழக்குப் பருவமழை
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (ஜன.19) விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் முதல் வரும் 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மேலும், வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலகியது வடகிழக்குப் பருவமழை
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (ஜன.19) விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் முதல் வரும் 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மேலும், வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









