கடந்த சில மாதங்களில் மட்டும் விராட் கோலி, ரோகித், மேக்ஸ்வெல், ஹென்ரிச் கிளாசென் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வு முடிவினை அறிவித்து வருவது தொடர் கதையாகி உள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த நிக்கோலஸ் பூரனும் திடீரென தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார்.
ஓய்வு முடிவினை அறிவித்துள்ள நிக்கோலஸ் பூரனுக்கு வயது வெறும் 29 மட்டுமே. அதுவும் தற்போது சரியான பஃர்மில் வேற இருக்கக்கூடிய சூழ்நிலையில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு என்பது அதிர்ச்சியை தாண்டி விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
டி20 லீக் தொடருக்கு முக்கியத்துவமா?
விவாதங்களுக்கு காரணம், தற்போதுள்ள கிரிக்கெட் போர்டுகளில் பிசிசிஐ தான் செல்வ செழிப்போடு இருக்கிறது. மேற்கிந்தியத் தீவு, தென்னாப்பிரிக்கா நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் கடந்த சில வருடங்களாகவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிலும், மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் போர்டு மற்றும் வீரர்களுக்கு இடையே சம்பளம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது.
அதன் காரணமாக தான், உலகில் பல்வேறு பகுதிகளில் நடைப்பெறும் டி20 லீக் தொடர்களில் மேற்கிந்தியத் தீவு வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதிரடியாக ஆடும் மேற்கிந்தியத் தீவு வீரர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளதும் ஒரு காரணம். தற்போது ஓய்வு முடிவினை அறிவித்துள்ள பூரன் கூட ஐபிஎல்,ILT20,CPL,men's 100, major league cricket, BPL, SA20, BBL, vitality blast, PSL, CLT20 என பல்வேறு நாடுகளில் நடைப்பெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கிய ப்ளேயராக கருதப்பட்ட நிக்கோலஸ் பூரன் ஓய்வு அறிவித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேடிவந்த கேப்டன் பதவி:
டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை பூரனுக்கு உண்டு. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக செப்டம்பர் 2016 இல் டி20 போட்டியில் அறிமுகமாகிய நிக்கோலஸ் பூரன், இதுவரை 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 13 அரைசதங்களுடன் 2275 ரன்கள் எடுத்துள்ளார். பிப்ரவரி 2019 இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய பூரன், இதுவரை 61 போட்டிகள் விளையாடியுள்ளார். 3 சதம், 11 அரைசதங்கள் உட்பட ஒருநாள் போட்டிகளில் 1983 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பூரன் விளையாடியதில்லை.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நிக்கோலஸ் பூரனுக்கு 2022 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிதாக அதில் அவர் சோபிக்கவில்லை. டி20 மற்றும் ஒருநாள் என இரு வடிவங்களிலும் ஒட்டுமொத்தமாக 30 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 8-ல் மட்டுமே இவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் சுற்றிலேயே வெளியேறியதை தொடர்ந்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலகக் கோப்பைக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெறாத நிலையில், அன்று முதல் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
ஓய்வு முடிவு குறித்து பூரன் நெகிழ்ச்சி:
நிக்கோலஸ் பூரன் தனது ஓய்வு முடிவு குறித்த பதிவில், "நான் விரும்பும் இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது, தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் - மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள், மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு. அந்த மெரூன் ஜெர்சியை அணிந்து, தேசிய கீதத்திற்காக நின்று, களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன் இந்த விளையாட்டுக்காக.. அணியின் கேப்டனாக வழிநடத்தியது என் இதயத்திற்கு எப்போதும் நெருக்கமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் எனது இந்த அத்தியாயம் முடிவடைந்தாலும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் மீதான என் அன்பு ஒருபோதும் மங்காது” என பூரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு முடிவினை அறிவித்துள்ள நிக்கோலஸ் பூரனுக்கு வயது வெறும் 29 மட்டுமே. அதுவும் தற்போது சரியான பஃர்மில் வேற இருக்கக்கூடிய சூழ்நிலையில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு என்பது அதிர்ச்சியை தாண்டி விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
டி20 லீக் தொடருக்கு முக்கியத்துவமா?
விவாதங்களுக்கு காரணம், தற்போதுள்ள கிரிக்கெட் போர்டுகளில் பிசிசிஐ தான் செல்வ செழிப்போடு இருக்கிறது. மேற்கிந்தியத் தீவு, தென்னாப்பிரிக்கா நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் கடந்த சில வருடங்களாகவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிலும், மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் போர்டு மற்றும் வீரர்களுக்கு இடையே சம்பளம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது.
அதன் காரணமாக தான், உலகில் பல்வேறு பகுதிகளில் நடைப்பெறும் டி20 லீக் தொடர்களில் மேற்கிந்தியத் தீவு வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதிரடியாக ஆடும் மேற்கிந்தியத் தீவு வீரர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளதும் ஒரு காரணம். தற்போது ஓய்வு முடிவினை அறிவித்துள்ள பூரன் கூட ஐபிஎல்,ILT20,CPL,men's 100, major league cricket, BPL, SA20, BBL, vitality blast, PSL, CLT20 என பல்வேறு நாடுகளில் நடைப்பெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கிய ப்ளேயராக கருதப்பட்ட நிக்கோலஸ் பூரன் ஓய்வு அறிவித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேடிவந்த கேப்டன் பதவி:
டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை பூரனுக்கு உண்டு. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக செப்டம்பர் 2016 இல் டி20 போட்டியில் அறிமுகமாகிய நிக்கோலஸ் பூரன், இதுவரை 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 13 அரைசதங்களுடன் 2275 ரன்கள் எடுத்துள்ளார். பிப்ரவரி 2019 இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய பூரன், இதுவரை 61 போட்டிகள் விளையாடியுள்ளார். 3 சதம், 11 அரைசதங்கள் உட்பட ஒருநாள் போட்டிகளில் 1983 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பூரன் விளையாடியதில்லை.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நிக்கோலஸ் பூரனுக்கு 2022 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிதாக அதில் அவர் சோபிக்கவில்லை. டி20 மற்றும் ஒருநாள் என இரு வடிவங்களிலும் ஒட்டுமொத்தமாக 30 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 8-ல் மட்டுமே இவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் சுற்றிலேயே வெளியேறியதை தொடர்ந்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலகக் கோப்பைக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெறாத நிலையில், அன்று முதல் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
ஓய்வு முடிவு குறித்து பூரன் நெகிழ்ச்சி:
நிக்கோலஸ் பூரன் தனது ஓய்வு முடிவு குறித்த பதிவில், "நான் விரும்பும் இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது, தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் - மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள், மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு. அந்த மெரூன் ஜெர்சியை அணிந்து, தேசிய கீதத்திற்காக நின்று, களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன் இந்த விளையாட்டுக்காக.. அணியின் கேப்டனாக வழிநடத்தியது என் இதயத்திற்கு எப்போதும் நெருக்கமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் எனது இந்த அத்தியாயம் முடிவடைந்தாலும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் மீதான என் அன்பு ஒருபோதும் மங்காது” என பூரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.