மைக்ரோபிளாஸ்டிக்குகள் (நுண்நெகிழி) நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு மூலம் வயிற்றுக்குள் சென்று பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இவை பெரிய பிளாஸ்டிக் பொருட்களின் சிதைவில் இருந்தும், பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் இருந்தும் வெளிப்படுகின்றன. ஏன், தினமும் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்டிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்கின்றன.
5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலான இந்த பிளாஸ்டிக் துகள்கள் கடல் உணவுகள், உப்பு, குடிநீர், தேன், சர்க்கரை, ஏன் பழங்கள் மற்றும் காய்கறிகள் வழியாகவும் நமது உணவுப் சங்கிலிக்குள் நுழைந்துவிட்டன. உதாரணமாக, பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கும்போது, அதனை மீன்கள் உட்கொள்கின்றன. இந்த மீன்களை உட்கொள்வதன் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் மனிதர்களின் உடலிலும் தங்கிவிடுகின்றன.
உலகளவில் மனிதர்கள் சராசரியாக ஒரு ஆண்டிற்கு 78 ஆயிரத்துக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மூலம் அதிகமான பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோபிளாஸ்டிக் உட்கொள்ளல் ஹார்மோன் சீர்குலைவு, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்பு மற்றும் டிஎன்ஏ பாதிப்பு போன்ற பல உடல்நல அபாயங்களை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இதய நோய், மற்றும் நுரையீரல் பாதிக்கப்படும். மேலும், இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். மேலும்,மைக்ரோபிளாஸ்டிக்குகள் இரைப்பைக் குழாயில் குவிந்து, குடல் அழற்சியையும், குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையின்மையையும் ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மைக்ரோபிளாஸ்டிக் வெளிப்பாட்டைக் குறைக்க, பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். மேலும், பிளாஸ்டிக்கில் உணவைச் சூடாக்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், குடிநீர் சுத்திகரிப்புக்கு தரச் சான்றிதழ் பெற்ற வாட்டர் ஃபில்டர்களை பயன்படுத்துவதன் மூலம், மைக்ரோபிளாஸ்டிக் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
உலக சுற்றுசூழல் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவேண்டும் என்றும், இதனால் சுற்றுசூழல் பாதிப்படைவது தவிர்க்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலான இந்த பிளாஸ்டிக் துகள்கள் கடல் உணவுகள், உப்பு, குடிநீர், தேன், சர்க்கரை, ஏன் பழங்கள் மற்றும் காய்கறிகள் வழியாகவும் நமது உணவுப் சங்கிலிக்குள் நுழைந்துவிட்டன. உதாரணமாக, பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கும்போது, அதனை மீன்கள் உட்கொள்கின்றன. இந்த மீன்களை உட்கொள்வதன் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் மனிதர்களின் உடலிலும் தங்கிவிடுகின்றன.
உலகளவில் மனிதர்கள் சராசரியாக ஒரு ஆண்டிற்கு 78 ஆயிரத்துக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மூலம் அதிகமான பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோபிளாஸ்டிக் உட்கொள்ளல் ஹார்மோன் சீர்குலைவு, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்பு மற்றும் டிஎன்ஏ பாதிப்பு போன்ற பல உடல்நல அபாயங்களை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இதய நோய், மற்றும் நுரையீரல் பாதிக்கப்படும். மேலும், இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். மேலும்,மைக்ரோபிளாஸ்டிக்குகள் இரைப்பைக் குழாயில் குவிந்து, குடல் அழற்சியையும், குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையின்மையையும் ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மைக்ரோபிளாஸ்டிக் வெளிப்பாட்டைக் குறைக்க, பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். மேலும், பிளாஸ்டிக்கில் உணவைச் சூடாக்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், குடிநீர் சுத்திகரிப்புக்கு தரச் சான்றிதழ் பெற்ற வாட்டர் ஃபில்டர்களை பயன்படுத்துவதன் மூலம், மைக்ரோபிளாஸ்டிக் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
உலக சுற்றுசூழல் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவேண்டும் என்றும், இதனால் சுற்றுசூழல் பாதிப்படைவது தவிர்க்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.