உண்ணாமல் இருத்தல் அல்லது உணவைச் சுருக்குதல் என்பதே ‘விரதம்’. பல்வேறு மதத்தினரும் பலவித விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர். மகாத்மா காந்தி, உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், உண்ணாவிரதத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிட்டுள்ளார்கள். அதுக்குறித்து இப்பகுதியில் காணலாம்.
உண்ணாவிரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!
இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும், செல்களுக்குள் மிகவும் திறமையாக குளுக்கோஸ் நுழைய அனுமதிக்கிறது, எடை இழப்புக்கு வழிவகுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைபயக்கும். ரத்தச்சர்க்கரை அளவைக் குறைத்து, ‘கிளைசெமிக்’ (Glycemic) கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.
மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கலாம். இது, எடை இழப்பு மற்றும் இன்சுலின் உணர்திறனுக்கு உதவும். தேவைக்கேற்ப மருந்துகள் அல்லது இன்சுலின் அளவைச் சரிசெய்ய, ரத்தச்சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.
உண்ணாவிரதமானது நீண்ட ஆயுளைத் தருவதாகக் கருதப்படுகிறது. இதய செயலிழப்பு விகிதங்களைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் உண்ணாவிரதம் உதவுவதாக ‘அமெரிக்க இதய சங்கம்’ கூறியுள்ளது.
நோன்பு நோற்றால்
தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பவர்களை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்காதவர்களோடு ஒப்பிடும்போது, இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் குறைவாக இருப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
மத காரணங்களுக்காக நோன்பு நோற்பவர்களிடம், நோன்பு பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், இஸ்லாமிய ரமலான் நோன்பு மற்றும் லெந்து தவக்கால நோன்பு உள்ளிட்ட நீண்ட நோன்புகளும் அடங்கும். சரியாக நோன்பு நோற்றால், பின்வரும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஓய்வு நேரத்தில் இதயத் துடிப்பு குறையும். ரத்த அழுத்தம் குறையும். இதயத்தின் ‘பம்ப்’ செய்யும் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். கெட்டக் கொழுப்பின் அளவு குறையும். இன்சுலின் அளவு குறையும். உண்ணாவிரதமானது நமக்கு வயதாவதைத் தள்ளிப்போடுகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது. எடை இழப்பை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் சிறந்த உடல் தோற்றத்தையும் பொலிவையும் தருகிறது.
எளிமையான உண்ணாவிரதம்!
தினமும் காலை 8 மணிக்கு காலை உணவை உண்டுவிட்டு, இரவு 8 மணிக்கு முன்பாக இரவு உணவை உண்டால், தினமும் 12 மணிநேரம் உண்ணா நோன்பிருந்த பலன் ஆயுள் முழுக்கக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
உண்ணாவிரத காலங்களில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். தலைச்சுற்றல் அல்லது உடல் பலவீனம் மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தால், விரதத்தைக் கைவிட்டுவிட்டு மருத்துவரை அணுகுங்கள். அதுபோல, எந்த வகை விரதம் உங்களுக்கு முழுபலனைத் தரும் என்பதை மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு மேற்கொள்வது மிகவும் நல்லது.
(கட்டுரையாளர்: டாக்டர் த.ரவிக்குமார் / சிநேகிதி இதழ் / 26.06.2025)
உண்ணாவிரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!
இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும், செல்களுக்குள் மிகவும் திறமையாக குளுக்கோஸ் நுழைய அனுமதிக்கிறது, எடை இழப்புக்கு வழிவகுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைபயக்கும். ரத்தச்சர்க்கரை அளவைக் குறைத்து, ‘கிளைசெமிக்’ (Glycemic) கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.
மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கலாம். இது, எடை இழப்பு மற்றும் இன்சுலின் உணர்திறனுக்கு உதவும். தேவைக்கேற்ப மருந்துகள் அல்லது இன்சுலின் அளவைச் சரிசெய்ய, ரத்தச்சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.
உண்ணாவிரதமானது நீண்ட ஆயுளைத் தருவதாகக் கருதப்படுகிறது. இதய செயலிழப்பு விகிதங்களைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் உண்ணாவிரதம் உதவுவதாக ‘அமெரிக்க இதய சங்கம்’ கூறியுள்ளது.
நோன்பு நோற்றால்
தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பவர்களை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்காதவர்களோடு ஒப்பிடும்போது, இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் குறைவாக இருப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
மத காரணங்களுக்காக நோன்பு நோற்பவர்களிடம், நோன்பு பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், இஸ்லாமிய ரமலான் நோன்பு மற்றும் லெந்து தவக்கால நோன்பு உள்ளிட்ட நீண்ட நோன்புகளும் அடங்கும். சரியாக நோன்பு நோற்றால், பின்வரும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஓய்வு நேரத்தில் இதயத் துடிப்பு குறையும். ரத்த அழுத்தம் குறையும். இதயத்தின் ‘பம்ப்’ செய்யும் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். கெட்டக் கொழுப்பின் அளவு குறையும். இன்சுலின் அளவு குறையும். உண்ணாவிரதமானது நமக்கு வயதாவதைத் தள்ளிப்போடுகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது. எடை இழப்பை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் சிறந்த உடல் தோற்றத்தையும் பொலிவையும் தருகிறது.
எளிமையான உண்ணாவிரதம்!
தினமும் காலை 8 மணிக்கு காலை உணவை உண்டுவிட்டு, இரவு 8 மணிக்கு முன்பாக இரவு உணவை உண்டால், தினமும் 12 மணிநேரம் உண்ணா நோன்பிருந்த பலன் ஆயுள் முழுக்கக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
உண்ணாவிரத காலங்களில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். தலைச்சுற்றல் அல்லது உடல் பலவீனம் மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தால், விரதத்தைக் கைவிட்டுவிட்டு மருத்துவரை அணுகுங்கள். அதுபோல, எந்த வகை விரதம் உங்களுக்கு முழுபலனைத் தரும் என்பதை மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு மேற்கொள்வது மிகவும் நல்லது.
(கட்டுரையாளர்: டாக்டர் த.ரவிக்குமார் / சிநேகிதி இதழ் / 26.06.2025)