மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, கதைக்களத்தால் ரசிகர்களைக் கவர்ந்த 'மாயக்கூத்து' திரைப்படம், இந்த வாரம் 'டெண்ட்கோட்டா' என்ற OTT தளத்தில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மை முயற்சியின் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தத் திரைப்படம், புதிய படைப்பாளிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது.
எழுத்தாளர் வாசன் தனது கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அவரது உண்மை வாழ்க்கையிலேயே எப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதும், அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதும்தான் 'மாயக்கூத்து' படத்தின் மையக் கரு. மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், மற்றும் அழுத்தமான புதுமுகங்களின் நடிப்பு ஆகியவை படத்தின் வலுவான அம்சங்களாக விளங்குகின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்.
வாசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நாகராஜன் கண்ணன், தனது உணர்ச்சிபூர்வமான, இயல்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி ஆகியோரின் நடிப்பும் படத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே கதைக்குத் தேவையான உணர்வுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சித்திரவதை இல்லாமல் இசையமைத்துள்ளார். அவரது ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைந்துள்ளன.
மாயக்கூத்து என்பது வெறும் திரைப்படம் அல்ல; இது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிப் பயணித்த ஒரு குழுவின் கனவு. இது போன்ற சிறந்த படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கினால் மட்டுமே, புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் வாசன் தனது கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அவரது உண்மை வாழ்க்கையிலேயே எப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதும், அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதும்தான் 'மாயக்கூத்து' படத்தின் மையக் கரு. மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், மற்றும் அழுத்தமான புதுமுகங்களின் நடிப்பு ஆகியவை படத்தின் வலுவான அம்சங்களாக விளங்குகின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்.
வாசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நாகராஜன் கண்ணன், தனது உணர்ச்சிபூர்வமான, இயல்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி ஆகியோரின் நடிப்பும் படத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே கதைக்குத் தேவையான உணர்வுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சித்திரவதை இல்லாமல் இசையமைத்துள்ளார். அவரது ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைந்துள்ளன.
மாயக்கூத்து என்பது வெறும் திரைப்படம் அல்ல; இது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிப் பயணித்த ஒரு குழுவின் கனவு. இது போன்ற சிறந்த படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கினால் மட்டுமே, புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.