நடிகர் சூர்யா- வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாக உள்ளது. இத்திரைப்படம் மறைந்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வாடிவாசல் படப்பிடிப்பு
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி படத்தில் இணைந்துள்ளார். இதன் காரணமாக வாடிவாசல் திரைப்பட பணிகள் கைவிடப்பட்டதாக இணையதளத்தில் வதந்திகள் பரவின. இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணு, “ வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு கண்டிப்பாக தொடங்கும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக வாடிவாசல் திரைப்படத்திற்காக காளைகளை அடக்கும் பயிற்சி உள்ளிட்டவைகளை மகாபலிபுரத்தில் சூர்யா எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு
மேலும் சூர்யா இரண்டு காளைகளை வாங்கி வளர்த்து வருவதாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. வெற்றி மாறன் - சூர்யா கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாடிவாசல் படப்பிடிப்புகளை விரைந்து முடித்து இந்தாண்டு இறுதிக்குள் அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாடிவாசல் படப்பிடிப்பு
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி படத்தில் இணைந்துள்ளார். இதன் காரணமாக வாடிவாசல் திரைப்பட பணிகள் கைவிடப்பட்டதாக இணையதளத்தில் வதந்திகள் பரவின. இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணு, “ வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு கண்டிப்பாக தொடங்கும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக வாடிவாசல் திரைப்படத்திற்காக காளைகளை அடக்கும் பயிற்சி உள்ளிட்டவைகளை மகாபலிபுரத்தில் சூர்யா எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு
மேலும் சூர்யா இரண்டு காளைகளை வாங்கி வளர்த்து வருவதாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. வெற்றி மாறன் - சூர்யா கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாடிவாசல் படப்பிடிப்புகளை விரைந்து முடித்து இந்தாண்டு இறுதிக்குள் அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.