Jayam Ravi: “தனியா அக்கவுண்ட் கிடையாது... எனக்கு மரியாதையே இல்ல..” டென்ஷனான ஜெயம் ரவி!

தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடமும் அவர் மனம் திறந்து பேசியிருந்த நிலையில், மனைவி ஆர்த்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Sep 27, 2024 - 16:31
 0
Jayam Ravi: “தனியா அக்கவுண்ட் கிடையாது... எனக்கு மரியாதையே இல்ல..” டென்ஷனான ஜெயம் ரவி!
ஆர்த்தி மீது ஜெயம் ரவி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். சாக்லெட் பாய் ஹீரோவாக வலம் வரும் ஜெயம் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இதுபற்றி ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு அவரது மனைவி ஆர்த்தி மறுப்புத் தெரிவித்திருந்தார். ஜெயம் ரவியின் முடிவு தன்னிச்சையானது எனவும், இதனால் நானும் எனது மகன்களும் பாதிக்கப்படுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்தது. ஜெயம் ரவி, ஆர்த்தி, இருவரில் யார் சொல்வது உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, தனது விவாகரத்து முடிவு குறித்து மனம் திறந்தார். மனைவி ஆர்த்தியிடம் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து குறித்து பேசி நோட்டீஸ் அனுப்பிவிட்டேன், இதுபற்றிய உண்மைகள் எல்லாம் நீதிமன்றத்தில் தெரியவரும் என்றார்.

அதுமட்டும் இல்லாமல் எனது முடிவுக்கு பாடகி கெனிஷா காரணம் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்திய ஜெயம் ரவி, அவரை பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அதேபோல், ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் ஐடியை அவரது மனைவி ஆர்த்தி கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதனை மீட்ட பின்னர் ஜெயம் ரவி அவரது போட்டோவை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருந்தார். இன்ஸ்டா அக்கவுண்ட் மட்டுமில்லாமல், ஜெயம் ரவியின் பேங்க் அக்கவுண்ட்டும் ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதாம்.

இதுபற்றி ஜெயம் ரவியே தன்னிடம் கூறியதாக பிரபல ஆர்ஜே ஷா வீடியோ வெளியிட்டு ஷாக்கிங் கொடுத்துள்ளார். அதில், ஜெயம் ரவி தன்னிடம் மனம் திறந்து பேசியதாக கூறியுள்ள அவர், வீட்டு வேலையாட்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை என தெரிவித்துள்ளாராம். மேலும், கடந்த 13 ஆண்டுகளாக எனக்கென தனியாக பேங்க் அக்கவுண்ட் கிடையாது எனவும், மனைவியுடன் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் தான் உள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதனால் ஜெயம் ரவி என்ன செலவு செய்தாலும், அவரது மனைவி ஆர்த்திக்கு தான் மெசேஜ் போகுமாம்.

அதேபோல், ஜெயம் ரவி என செலவு செய்கிறார் என, அவரது உதவியாளருக்கு போன் போட்டு கேட்பாராம் ஆர்த்தி. அது எனக்கு ரொம்ப அசிங்கமாக இருந்ததாகக் கூறியுள்ள ஜெயம் ரவி, பிரதர் படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு சென்றிருந்தபோது, ஹோட்டலில் நீங்க மட்டும் தான் இருக்கீங்களா, கூட வேற யாரு இருக்காங்களா என வீடியோ கால் பண்ணி செக் செய்துள்ளாராம் ஆர்த்தி. ஒவ்வொரு சின்ன செலவுக்கும் கணக்கு கேட்டு நச்சரிப்பது தான் ஆர்த்தியின் வேலையாக இருந்துள்ளது. அதேபோல், ஜெயம் ரவியின் மாமியாரும் தொடர்ந்து படங்கள் தயாரித்து, அதில் நஷ்ட கணக்கு காட்டியுள்ளாராம்.

திருமண வாழ்வில் முதல் 10 ஆண்டுகள் மட்டுமே நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தோம், அதன் பின்னர் என்ன ஆனது என்றே தெரியவில்லை எனவும் ஜெயம் ரவி கூறியுள்ளார். அதேபோல், கடந்த இரண்டு வருடங்களாக என்னை மரியாதை இல்லாமல் நடத்தினர். முக்கியமாக ஆர்த்தியின் வீட்டில் உள்ள வேலையாட்களுக்குக் கூட மரியாதை கிடைக்கும், ஆனால் எனக்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள். இதனால் தான் விவகாரத்து முடிவை எடுத்தாகவும், இப்போது ஆர்த்தி ஈகோ காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட தான், பாடகியும் மனநல ஆலோசகருமான கெனிஷாவை சதித்ததாகவும் ஜெயம் ரவி தன்னிடம் கூறியதாகவும் ஆர்ஜே ஷா கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக “என்கிட்ட இப்போ எதுவுமே இல்ல.. என்னால அந்த வீட்டுல இருக்க முடியல.. மூச்சு முட்டுது. அதனால் நான் கிளம்பிட்டேன். என்கிட்டே இப்போ ஒரு கார் மட்டும் தான் இருக்கு. நான் ஒரு நாடோடி மாதிரி. சென்னை ECR சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருந்து தனது உடைமைகளை மீட்டுத்தருமாறு ஆர்த்தி மிது ஜெயம் ரவி புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow