தவெக கட்சிக்கொடி.. ஆவணி பவுர்ணமியில் அறிமுகம் செய்த விஜய்.. பனையூரில் கொடி பறக்குதா?
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை வரும் 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியான நிலையில் இன்றைய தினம் ஆவணி பவுர்ணமி அவிட்டம் நாளில் கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்துள்ளார்.
நடிகர் விஜய் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்தில் தனது கட்சி கொடியை பறக்க விட்டுள்ளார். பவுர்ணமி தினமான இன்றைய தினம் ஆவணி அவிட்டம் நாளில் மஞ்சள் நிறத்திலான கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார் விஜய். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த நிலையில் அலுவலக வாசலில் கொடியை ஏற்றி பறக்க விட்டுள்ளார் தலைவர் விஜய்.
நடிகர் விஜய் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே அரசியல் கட்சி தொடங்கிவிட்டார். தி கோட் ( GOAT) திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படம் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார் விஜய். இப்போது 69வது படத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் விஜய். தொண்டர்களுடன் சந்திப்பு, அரசியல் பேச்சுக்கள் என தமிழக வெற்றிக்கழகம் முகாமில் அனல் பறக்கிறது. நடிகர் விஜய் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே வரும் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் ஏற்றி கொடியை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டிடி கட்சியின் நிர்வாகிகள்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த கொடி அறிமுகம் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 300 பேர்க்கு மட்டும் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடி அறிமுகம் நிகழ்ச்சி வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நிகழ்ச்சி நல்லபடியாக நடைபெற மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டைமிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன்தொடர்ச்சியாக மதுரையில் மாநாட்டை நடத்தப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடம் மாநாடு நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக்கூறி சேலம், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநாட்டுக்கான இடம் தேடும் பணி தொடர்ந்தது.
இதற்கிடையே விஜய் மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கு பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலையீடுதான் காரணம் என தவெக நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தற்போது விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பல ஏக்கர் காலி இடத்தை புஸ்ஸி என்.ஆனந்த் தேர்வு செய்திருப்பதாகவும் அங்கு செப்டம்பர் 22ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியானது. அதன்படி வரும் 22ஆம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த கொடியில் 2 வண்ணங்கள் இடம்பெறும் வகையில் 3 வகையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் ஒரு கொடியை விஜய் தேர்வு செய்துள்ளதாகவும், அதனையே அவர் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆவணி பவுர்ணமி தினமான இன்று அவிட்டம் நட்சத்திரம் அற்புதமான நாளாகும். புதிய செயல்கள் தொடங்கவும் நல்ல நாளாகும். இந்த நல்ல நாளில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார் நடிகர் விஜய். அந்த கொடியின் நிறமானது மஞ்சள் வர்ணத்தில் உள்ளது. கொடியில் விஜய் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் லெட்டர் பேடில் மஞ்சள் நிறம் இடம் பெற்றிருந்தது. தற்போது கொடியின் வண்ணமும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதுதான் உண்மையான கொடியா? இது ஒத்திகை பார்க்கப்பட்டதற்காக ஏற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
What's Your Reaction?