K U M U D A M   N E W S

வீட்டில் குடியிருப்போருக்கு எழுந்த சிக்கல்

இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

துணைவேந்தர்கள் நியமனம் - உச்சநீதிமன்றம் அதிரடி

"பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும்"

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும்- சசிகலா ஆதங்கம்

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா

ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடிகர் சயிஃப் அலிகான் மீது வீடுபுகுந்து தாக்குதல்

கத்திக்குத்து - மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.