#BREAKING || தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜா
தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.
தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிரடியாக விளையாடிய அஸ்வின் சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் டெஸ்ட்டில் 6வது சதம் (102 ரன்) அடித்து சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரிகள் ஓடவிட்ட அவர் 2 சிக்சர்களையும் விளாசினார்
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக முந்தையை ஆட்சியில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சந்திரபாபு நாயடு குற்றம்சாட்டியிருந்தார்.
''மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியபோது கூட்டணிக் கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால் வெற்றி பெற்றோம். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்'' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.