K U M U D A M   N E W S
Advertisement

Chennai Airport : 10 விமானங்கள் திடீர் ரத்து.... அதிகாரிகள் அறிவிப்பு! பயணிகளின் நிலை என்ன?

10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.. என்ன காரணம் தெரியுமா?

மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். 

விமான பயணம்... மதுரை மக்களுக்கு குட் நியூஸ்...

மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாலியல் வழக்கு... நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் நடிகர் சிக்கிக் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

கனமழை எதிரொலி – விமான சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chess Olympiad 2024 : தங்கம் வென்ற தங்கப்பிள்ளைகள்.., Airport–ல் மக்கள் ஆரவாரம்

Tamil Nadu Players Won in Chess Olympiad 2024 : செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற தமிழகத்தின் தங்க மகன், மகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பலமான எதிராளிகளை சமாளித்து வென்றது மன நிறைவாக இருப்பதாக கூட்டாக பேட்டி.

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் சொன்ன புதிய தகவல்!

இன்று ( செப். 22) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அனல் பறக்கப்போகுதாம்... வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் மக்களே!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.