K U M U D A M   N E W S

இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படும்... பிரதமர் மோடி உறுதி!

தற்போது இந்தியா வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை.வாய்ப்புகளை உருவாக்குகிறது என பிரதமர் மோடி நியூயார்க்கில் உரையாற்றியுள்ளார்.

செப்.27-ல் பிரதமருடன் முதலமைச்சர் சந்திப்பு

சமக்ரா சிக்ஷா நிதி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 27ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை.. ஆனால்..’..குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியா அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயை குணமாக்க இந்தியா தடுப்பூசி தயாரித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பப்பை புற்றுநோயை குணமாக்க புதிய சிகிச்சை நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளோம்.

அமெரிக்காவில் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி.. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாடு நடக்கும் வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகருக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி, , ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். மாநாடு தொடங்குவதற்கு முன்பாக இவர்கள் 4 பேரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அமெரிக்காவில் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு கொடுத்த இந்திய வம்சாவளியினர்!

பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

PM Modi: அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பளித்த இந்தியர்கள்!

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை... இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் கேள்வி

அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமரியாதை செய்துள்ள திமுக அரசு, பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு குற்றம்சாட்டியுள்ளார்.

குண்டர் சட்டம்... தேவையான சட்டத் திருத்தம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுத்தல்!

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

PM Modi : ’ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால்..’ வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி!

PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காஷ்மீர் தேர்தல்... மோடி ஸ்ரீநகரில் பரப்புரை

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்