பிரதமரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்- சரத்குமார் எச்சரிக்கை!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.
”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
”மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.